October 22, 2006

ஏ.ஜே. என்ற ஆளுமைமிக்க ஆகிருதி! - மேமன்கவி

அண்மையில் காலமான ஈழத்துக் கல்விமானும் பத்திரிகையாளருமான ஏ. ஜே. கனகரட்னா அவர்கள் பற்றிய எனது நினைவுப் பகிர்வு ஒன்றில் ஈழத்துக் கவிஞர் மேமன்கவி அவர்கள் இட்ட பின்னூட்டத்தைத் தனியே ஒரு பதிவாக இங்கு இட்டிருக்கிறேன்.

ஏ.ஜே. என்ற ஆளுமைமிக்க ஆகிருதி!

ஆளுமைமிக்க ஆகிருதி
ஒன்றின் மரணம் தரும்
மௌனம்-

அது அதன்
உடலின் நிரந்தர உறக்கம்
அதுவே விழிப்பாகி....
விரிந்த மேசையின் பரப்பில்
ஒடுங்கிய புத்தக அடுக்குகளில்
இணைய உலாவிகளின் முடக்கங்களில்
உரத்துப் பேசத் தொடங்கும் தருணமிது!

"எதற்குமே உரிமைக் கோராத
ஞானம்" பெற்ற
ஆகிருதியின் ஆக்கங்களுக்கே
அது சாத்தியம்.
அதன்-
திறன்களின் மீது
பாய்ச்சப்படும் வெளிச்சம் தரும்
புலர்வு
அருகே இருந்த மூளைகளில்....

பேசும் வார்த்தைகள் மௌனமாகிப் போக-
எழுதிய வார்த்தைகள் போல்
வாழ்ந்து போன வாழ்வு
அந்த புலரவின் பிரகாசத்தில்
உரத்து வாசிக்கப்படும்.

"ஏ.ஜே" எனும்
மறையாத ஆளுமை
மிக்க
ஆகிருதியும்
அதுவான ஒன்றுதான்!

- மேமன்கவி

அமரர் ஏ. ஜே. கனகரத்னா விக்கிபீடியாவில்.


0 comments: