March 10, 2007

பேராசிரியர் எலியேசர் நினைவு நாள் இன்று

பேராசிரியர் மாமனிதர் சி. ஜே. எலியேசர் அவர்களின் நினைவு தினம் இன்றாகும் (மார்ச் 10, 2001). இலங்கையில் கல்வி கற்கும் காலங்களில் இவரது கணித நூல்களை (குறிப்பாக பிரயோக கணிதப் பயிற்சி நூலை) பலரும் மறந்திருக்க மாட்டீர்கள். இவரது "எலியேசர் தேற்றம்" பௌதிகவியலில் பயன்படுத்தப்படுகிறது.


கிரிஸ்டி ஜெயரத்தினம் எலியேசர் (Christie Jeyaratnam Eliezer) 1918 ஆம் ஆண்டில் ஈழத்தில் பிறந்தவர். தனது ஆரம்பக் கல்வியை பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியிலும் உயர் கல்வியை கொழும்பு பல்கலைக்கழகக் கல்லூரியிலும் பெற்று, பின்னர் லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் கலாநிதி ("'PhD'') பட்டம் பெற்றார். அங்கேயே 1949இல் புகழ்பெற்ற விஞ்ஞானி போல் டிராக் (''Paul Dirac'') அவர்களின் வழிகாட்டலில் டாக்டர் (''DSc'') பட்டமும் பெற்றார்.

எலியேசர் பின்னர் கொழும்பு திரும்பி பல்கலைக்கழகத்தில் கணிதத்துறையில் பேராசிரியராகவும் விஞ்ஞான பீடத்தின் தலைவராகவும் கடமையாற்றினார். ஜெனீவா, வியன்னா, மும்பாய் நகரங்களில் ஜக்கிய நாடுகளின் சார்பாக ''அமைதிக்காக அணு சக்தி'' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றவும் அழைக்கப்பட்டார்.

1959இல் மலேயா பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியரானார். 1968இல் அவுஸ்திரேலியா மெல்பேர்ணிற்குக் குடியேறி லா ட்ரோப் (''La Trobe'') பல்கலைக்கழகத்தில் பயன்முகக் கணிதத்தில் (Appied Maths) பேராசிரியரானார். அங்கே அவர் இயற்பியல் பீடத்தின் (துறையின்) தலைவராகவும் பல்கலைக்கழகத்தின் கூடுதல் துணை-வேந்தராகவும் இருந்து 1983இல் இளைப்பாறினார்.

அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழ் சமுகத்திற்கு இவர் ஆற்றிய பங்கு அளப்பரியது. 1978 ம் ஆண்டில் விக்ரோறியா மாநில 'இலங்கைத் தமிழ்ச் சங்கத்தின்' தொடக்கத் தலைவராக பதவியேற்று இங்கு குடியேறும் தமிழர்களுக்கு ஆணிவேராக உழைத்தது மட்டுமல்லாமல் 1983ம் ஆண்டில் இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலைக்கு உட்படுத்தப்பட்டபோது முழுமூச்சாக அம்மக்களின் விடிவுக்காக உழைத்தவரும் ஆவார். 1984ம் ஆண்டின் அவுஸ்திரேலிய தமிழ் சங்கங்களின் சம்மேளனம் அமைக்கப்பட்டபோது அதன் தலைவராகவும் பதவியேற்றார்.

இவர் அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழ் மக்களுக்காகவும் கணிதத்துறைக்கும் ஆற்றிய சேவையைப் பாராட்டி அவுஸ்திரேலிய அரசின் அதி உயர் ''Order of Australia'' விருது 1996இல் வழங்கப்பட்டது.

1997 ம் ஆண்டு தமிழீழத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களால் மாமனிதர் விருது பேராசிரியருக்கு வழங்கப்பட்டது. முதல் முறையாக இவ் விருது தமிழீழத்துக்கு அப்பால் வாழும் ஒரு தமிழருக்கு வழங்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

எலியேசரின் புகழ்பெற்ற தேற்றம்:

புரோத்தன் (நேர்மின்னி) ஒன்றின் மின்புலத்தினூடாக இலத்திரன் (எதிர்மின்னி) அந்த புரோத்தனின் மையத்தை நோக்கிச் (''radially'') செல்லும் போது மின் ஈர்ப்பால் மோதல் ஏற்படவில்லை. அதாவது அந்த இலத்திரன் லோரன்ஸ்-டிராக் (''Lorentz-Dirac'') சமன்பாட்டின் படி எதிர்பார்த்தது போல புரோத்தனால் ஈர்க்கப்பட்டு மோதலை ஏற்படுத்தவில்லை. மாறாக, அது இலத்திரனில் இருந்து எதிர்க்கப்பட்டு நேரத்துடன் 'எல்லை அடைவாக அதிகரிக்கும்' (''asymptotically'') ஆர்முடுகலுடன் செல்கிறது என எலியேசர் நிறுவினார். இது ''எலியேசரின் தேற்றம்'' எனப்படுகிறது.
[Eliezer, C.J., ''The hydrogen atom and the classical theory of radiation'', Proc. Camb. Phil. Soc. 39, 173_ (1943)]

விக்கிபீடியாவில் பேராசிரியர் சி. ஜே. எலியேசர்.

18 comments:

said...

அருமையான் பதிவு ஐயா!!
இவறை பற்றி ஒரு செவி வழி கதை கேள்வி பட்டிருக்கிறன்.
Albert Einstein da சார்பு வேக தத்துவத்தை அறிமுகபடுத்தேக்க அதை விளங்கின ஆக்களில ஒருத்தர் எண்டு என்ர சேர் சொன்னவர்.

said...

கனக்ஸ்
உண்மையில் இது நல்ல பதிவு.அவரைப் பற்றி நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.
இப்படிப்பட்ட பெரியவர்களை அவுஸ்திரேலிய தமிழர் நாம் மறக்கக் கூடாது. இவரை மெல்போனில் நான் இருக்கும்போது நேரிலே பார்க்கக் கூடிய வாய்ப்புகள் அநேகம் கிடைத்தன.
பகிர்ந்தமைக்கு நன்றி

said...

நினைவுநாட் பகிர்வுக்கு நன்றி சிறிதரன்.

said...

கனதியான, காலத்தின் தேவை கருதிய பதிவுக்கு நன்றி அண்ணா.

நான் பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்தில் இவருடைய பேர்த்தியின் கணவனுடன் படித்ததால் பல தடவை வீட்டுக்கும் சென்ற வாய்ப்பு. தன் இறுதிக்காலத்தில் கோல்ப் விளையாடாமல் இருக்கமாட்டார்.

நம் தமிழ் அறிவுச்சொத்துக்களில் ஒன்று.
இவரின் இறந்த நாளன்று வானொலியில் நிகழ்ச்சியொன்றைச் செய்து நேயர்களையும் அழைத்திருந்தேன். அப்போது நிறைய நேயர்கள் அழைப்பில் வந்து கொடுத்த பிரிவுத்துயர் வார்த்தைகள், எம் மக்கள் அவர் மீது கொண்ட அளவிலா அன்பிற்கோர் எடுத்துக்காட்டு.

இவரது இறுதிக்காலத்தில் நேய்வாய்ப்பட்டு இருக்கும் போது விடுதலைப் புலிகளுக்கு உதவினார் என்று இங்குள்ள சிங்கள அமைப்பு கொடுத்த புகாரின் பேரில் ஒரு தொலைக்காட்சி ஊடக நிகழ்ச்சித் தயாரிப்பாளர் தன் ஒலிபரப்புக் கண்ணியத்தை மீறி தொடர்ந்து அவதூறாக நடந்து பின் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு நம் மக்களின் கண்டனத்தையும் சம்பாதித்து மன்னிப்புக் கேட்டுப் பிரதியுபகாரமாக எம் மக்களின் பிரச்சனை தழுவிய விவரணம் ஒன்றை ஒளிபரப்பியதும் நினைவுக்கு வருகுது.

said...

//Albert Einstein da சார்பு வேக தத்துவத்தை அறிமுகபடுத்தேக்க அதை விளங்கின ஆக்களில ஒருத்தர் எண்டு என்ர சேர் சொன்னவர்//

அந்தத் தகவலுக்கு நன்றி திலகன். இவருடைய Applied Maths புத்தகத்திலிருந்து தானாம் அப்ப AL பரீட்சைக்கு கேள்விகள் எடுக்கிறவையாம் எண்டு கேள்வி. அதால இவருடைய புத்தகங்கள் விற்பனைக்கு தடை செய்யப்பட்டதாம் எண்டு அப்ப கேள்விப்பட்டிருக்கிறன்.

said...

நல்ல தொரு பதிவு நல்லதொரு நினைவு மீட்டல் . இவரது புகழ் பற்றி ஹாட்லி கல்லூரி மாணவர்கள் குதூகலித்து நினைவு கூருவர்.

said...

செல்லி, //இவரை மெல்போனில் நான் இருக்கும்போது நேரிலே பார்க்கக் கூடிய வாய்ப்புகள் அநேகம் கிடைத்தன.//
ஆமாம், கடைசிக் காலங்களில் இவர் தமிழர்களுக்கு சேவை செய்வதிலேயே கழித்தவர். வருகைக்கு நன்றி.

said...

வசந்தன் வருகைக்கு நன்றிகள்.

said...

பிரபா,
//இவரது இறுதிக்காலத்தில் நேய்வாய்ப்பட்டு இருக்கும் போது விடுதலைப் புலிகளுக்கு உதவினார் என்று இங்குள்ள சிங்கள அமைப்பு கொடுத்த புகாரின் பேரில் ஒரு தொலைக்காட்சி ஊடக நிகழ்ச்சித் தயாரிப்பாளர் தன் ஒலிபரப்புக் கண்ணியத்தை மீறி தொடர்ந்து அவதூறாக நடந்து பின் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு நம் மக்களின் கண்டனத்தையும் சம்பாதித்து மன்னிப்புக் கேட்டுப் பிரதியுபகாரமாக எம் மக்களின் பிரச்சனை தழுவிய விவரணம் ஒன்றை ஒளிபரப்பியதும் நினைவுக்கு வருகுது.//

ஆமாம், ABCயில் பேராசிரியருடைய பேட்டியுடன் நிகழ்ச்சி நடந்தது. நன்றி.

said...

சின்னக்குட்டி,
//இவரது புகழ் பற்றி ஹாட்லி கல்லூரி மாணவர்கள் குதூகலித்து நினைவு கூருவர்.//

பார்க்க: hartleycollege.com.

said...

கனக்ஸ்,
தேவையான, அருமையான பதிவு. பேராசிரியர் பற்றிப் பல தகவல்களை அறிந்து கொண்டேன். மிக்க நன்றிகள்.

said...

மிக அருமையான பதிவு, கனகு! என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். தமிழுக்கும், தமிழருக்கும் மங்காப் புகழ் சேர்த்த இம் மாமனிதரை நினைவு கூர்ந்ததற்கு என் நன்றிகள். இவரை நேரடியாக நன்குஅறிந்தவர்கள் இவர் வரலாற்றை நூல் வடிவில் ஆக்க வேண்டும். அதில் இவருடைய அரிய அறிவியல் படப்புகளை விரித்தும் எழுதுதல் வேண்டும். உங்கள் நற்பணிகள் தொடர வாழ்த்துக்கள்!

said...

வெற்றி,
//பேராசிரியர் பற்றிப் பல தகவல்களை அறிந்து கொண்டேன்//

வருகைக்கு நன்றிகள்.

said...

செல்வா,

விக்கிபீடியாவில் எழுதப்பட்ட கட்டுரையை சிறந்த முறையில் திருத்தித் தந்திருந்தீர்கள். எனது முதற்கண் நன்றிகள்.

//இவரை நேரடியாக நன்குஅறிந்தவர்கள் இவர் வரலாற்றை நூல் வடிவில் ஆக்க வேண்டும். அதில் இவருடைய அரிய அறிவியல் படப்புகளை விரித்தும் எழுதுதல் வேண்டும்.//

அருமையான காலத்தின் தேவை கருதிய வேண்டுகோள். கட்டாயம் இவை வெளிவரவேண்டும். இவரை நன்றாக அறிந்தவர்கள் அல்லது உறவினர்கள் இவரது வரலாற்றையும் ஆக்கங்களையும் நூல் வடிவில் வெளியிட முன்வரவேண்டும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

said...

அண்ணா!
இவ்வறிஞரைப் பற்றி ;அவர் நினைவு நாளில் நினைவு கூர்ந்து, பகிர்ந்துள்ளீர்கள். மிக்க நன்றி!

said...

என்னைப் போன்றவர்களுக்கு ஒரு மாமனிதரை அறிமுக படுத்தியதற்கு நன்றிகள் பல!

said...

நன்றி கனக்ஸ்.

said...

யோகன், தென்றல் மற்றும் டிசே அனைவருக்கும் உங்கள் வருகைக்கு எனது நன்றிகள்.