November 04, 2021

விபுலாநந்தரும் கலைச் சொல்லாக்கமும்

சுவாமி விபுலாநந்தர் தலைமையேற்று நடத்திய தமிழ்க் கலைச்சொல்லாக்க மாநாடு 1936 செப்டெம்பர் 20 ஞாயிற்றுக்கிழமை சென்னை பச்சையப்பன் கலாசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

திருவாங்கூர் திவான் சேர் சி. பி. இராமசாமி ஐயர் இம்மாநாட்டைத் தொடக்கி வைத்தார். சென்னைப் பல்கலைக்கழகம், இலங்கை அரசாங்கம், தென்னிந்திய ஆசிரியர் சங்கம், தென்னிந்தியத் தமிழ்ச் சங்கம் ஆகியன அறிஞர்களை மாநாட்டுக்கு அனுப்பியிருந்தன.

சுவாமி விபுலாநந்தர் கலைசொல்லாக்கக் குழுவின் தலைவராகவும், வேதியியல் கலைச்சொல் நூற் குழுவின் தலைவராகவும் இருந்து செயற்பட்டார்.

கொழும்பு கல்வித்துறையில் தலைமை மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றிய கீ. சி. இராமசாமி ஐயர் கணிதக் கலைச்சொல் நூற்குழுத் தலைவராக இருந்தார்.





0 comments: